வரும் நவம்பர் மாதம் முதல் இந்த கையடக்க கணினி வர்த்தக ரீதியிலும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டேட்டா வைண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் டேப்லெட் கம்ப்யூட்டர் முழுக்க முழுக்க பாடத்திட்டத்துக்கு உதவும் வகையில் இருக்கும்.
ஆனால், வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் டேப்லெட்டில் 3ஜி வசதியுடன் வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ 2.2 வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த டேப்லெட் 7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் டேப்லெட்டுக்கு ஏர்செல் நிறுவனம் சிம் கார்டுகளை வழங்க இருப்பதாக டேட்டா வைண்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வர்த்தக ரீதியில் இந்த டேப்லெட் ரூ.3,000 விலையில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் டேட்டா வைண்டு தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய மார்க்கெட்டில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான பீட்டெல் நிறுவனம் ரூ.9,999க்கு டேப்லெட் கம்ப்யூட்டரை விற்பனை செய்து வருகிறது. இதுவரை இந்த டேப்லெட் கம்ப்யூட்டரே இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலை டேப்லெட்டாக இருக்கிறது.
இந்த நிலையில், விரைவில் வர்த்தக ரீதியில் ஆகாஷ் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டால் மற்ற நிறுவனங்களின் டேப்லெட்டுகளுக்கு அது கடும் சவாலையும், போட்டியையும் ஏற்படுத்தும்.
0 comments:
Post a Comment